/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் முதியவர் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு
/
ரயிலில் முதியவர் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு
ADDED : மே 29, 2025 03:23 AM

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலைய 2வது பிளாட்பாரத்தில், விழுப்புரம் - தாம்பரம் செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 66055) இரவு 9:00 மணி முதல் நிறுத்தி வைப்பது வழக்கம். மறுநாள் காலை 5:30 மணிக்கு இந்த ரயில் தாம்பரம் நோக்கி புறப்படும்.
இந்த ரயில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரயில் நிலைய 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது.
அதிகாலை 2:15 மணிக்கு, விழுப்புரம் ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது, பின்பக்க 3வது பெட்டி கழிப்பறை அருகே உள்ள முதல் சீட்டில், அடையாளம் தெரியாத 65 வயதுள்ள முதியவர் ஒருவர், க்ரீப் பேண்டேஜ் துணி மூலம் துாக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இறந்த முதியவர் காவி நிறத்தில் வேட்டி, சட்டை அணிந்திருந்தார். சடலத்தை மீட்ட போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என, தெரியவில்லை.
இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.