sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயிலில் முதியவர் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு

/

ரயிலில் முதியவர் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு

ரயிலில் முதியவர் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு

ரயிலில் முதியவர் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு


ADDED : மே 29, 2025 03:23 AM

Google News

ADDED : மே 29, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலைய 2வது பிளாட்பாரத்தில், விழுப்புரம் - தாம்பரம் செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 66055) இரவு 9:00 மணி முதல் நிறுத்தி வைப்பது வழக்கம். மறுநாள் காலை 5:30 மணிக்கு இந்த ரயில் தாம்பரம் நோக்கி புறப்படும்.

இந்த ரயில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரயில் நிலைய 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது.

அதிகாலை 2:15 மணிக்கு, விழுப்புரம் ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது, பின்பக்க 3வது பெட்டி கழிப்பறை அருகே உள்ள முதல் சீட்டில், அடையாளம் தெரியாத 65 வயதுள்ள முதியவர் ஒருவர், க்ரீப் பேண்டேஜ் துணி மூலம் துாக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இறந்த முதியவர் காவி நிறத்தில் வேட்டி, சட்டை அணிந்திருந்தார். சடலத்தை மீட்ட போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என, தெரியவில்லை.

இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us