ADDED : நவ 22, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.
மயிலம் அடுத்த கர்ணாவூரைச் சேர்ந்த முனுசாமி மகன் சுப்ரமணி, 59; நேற்று முன்தினம் இரவு ஜக்காம்பேட்டையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார்.
அப்போது திருச்சியில் இருந்து சென்னையை நோக்கிச் சென்ற கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சுப்ரமணி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.