ADDED : ஆக 25, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்:
திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் மோதி முதியவர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர்குப்பத்தைச் சேர்ந்தவர் வீராசாமி, 75; கூலித்தொழிலாளி.
இவர், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு துலுக்கபாளையம் கிராமம் கடலுார் - சித்தூர் சாலையை நடந்து கடந் துள்ளார். அப்போது மடப்பட்டில் இருந்து திருக்கோவிலுார் நோக்கிச் சென்ற கார் வீராசாமி மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேய இறந்தார்.
திருவெண்ணெய்நல் லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.