/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி
/
பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி
ADDED : ஆக 25, 2025 11:19 PM
திருவெண்ணெய்நல்லுார்:
திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கலாம் மகன் யூசப், 21; பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு 9:50 மணியளவில் அவரது தங்கை பிரியாவுடன் பைக்கில் கடலுார் - சித்துார் சாலையில் டி.எடப்பாளையம் பஸ் நிறுத்தம் வழியாக சென்றார்.
அப்போது எதிரே வந்த ஆட்டோ, யூசப் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், யூசப், பிரியா, ஆட்டோ ஓட்டுநர் பைசல் ரகுமான், மற்றும் ஆட்டோவில் வந்த ஆசிப், சமீர் ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.
உடன், 5 பேரையும் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யூசப் இறந்தார். மற்ற நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.