ADDED : ஜன 14, 2025 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர்: அரசூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்,56; இவர் நேற்று விடியற்காலை 5:30 மணிக்கு அரசூர் - பண்ருட்டி சாலையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது பின்னால் வந்த டாட்டா ஏஸ் வாகனம் ராமச்சந்திரன் மீது மோதியது.
அதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.