ADDED : ஜூலை 24, 2025 09:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மனநலம் பாதித்த முதியவர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பைத்தாம்பாடி கூட்ரோடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பல மாதங்களாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
இதையெடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

