ADDED : ஏப் 22, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: கிளியனுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தார்.
கிளியனுார் அடுத்த ஓமந்துாரை சேர்ந்தவர் பூமிதேவி, 70; இவர் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வயல்வெளிக்குச் சென்றார். அப்போது, புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் ஓமந்தூர் சந்திப்பில் அந்த வழியாக சென்ற வாகனம் பூமிதேவி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் சம்பவ இடத்திலேயே பூமிதேவி இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.