/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் வழித்தட பிரச்னை; 3 ரயில்கள் நிறுத்தம் சிதம்பரம் அருகே பயணிகள் தவிப்பு
/
மின் வழித்தட பிரச்னை; 3 ரயில்கள் நிறுத்தம் சிதம்பரம் அருகே பயணிகள் தவிப்பு
மின் வழித்தட பிரச்னை; 3 ரயில்கள் நிறுத்தம் சிதம்பரம் அருகே பயணிகள் தவிப்பு
மின் வழித்தட பிரச்னை; 3 ரயில்கள் நிறுத்தம் சிதம்பரம் அருகே பயணிகள் தவிப்பு
ADDED : அக் 28, 2024 05:34 AM

சிதம்பரம் : சிதம்பரம் அருகே ரயில்வே மின் வழித்தடத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, மைசூர் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் தவித்தனர்.
கடலுாரில் இருந்து மைசூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 3:40 மணிக்கு, கடலுார் முதுநகர் ரயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்பட்டது.
சிதம்பரத்தை கடந்து வல்லம்படுகை என்ற இடத்தில் 4:30 மணியளவில் சென்றபோது, ரயில்வே மின்வழித்தடத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ரயில் வழியில் நின்றது.
இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரயில், கொள்ளிடம் ரயில் நிலையத்திலும், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது.
சிதம்பரத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து விரைந்து, சுமார் 1 மணி நேரம் போராடி, மின் வழித்தட பிரச்னையை கண்டறிந்து சரி செய்தனர். அதையடுத்து, 5:30 மணிக்கு, மைசூர் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்களும் புறப்பட்டு சென்றனர்.
தீபாவளி பண்டிகை நேரத்தில், ரயிலில் அதிக பயணிகள் பயணித்த நிலையில், மூன்று ரயில்களில் ரயில் பயணிகள் தவித்தனர்.