/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்வாரிய பணியாளர்கள் போராட்டம்
/
மின்வாரிய பணியாளர்கள் போராட்டம்
ADDED : மார் 13, 2026 05:42 AM
விழுப்புரம்: கடந்த 2023ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்கிட கோரி மின் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தினர் அறவழி போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யூ., வட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மின் ஊழியர் சம்மேளனம் வட்ட செயலாளர் நாகராஜ், அனைத்து பணியாளர் பொறியாளர் சங்கம் வட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண கமிட்டி அமைக்க வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் பொறியாளர் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

