/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : அக் 06, 2025 02:07 AM
விழுப்புரம்,: மாவட்டத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது என, விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் அக்., மாதத்திற்கான கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 11:00 மணியளவில் நடக்கிறது.
வரும் 7ம் தேதி நாளை விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 14ம் தேதி கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 21ம் தேதி செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 23ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 28 தேதி திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், இக்கூட்டம் நடக்கிறது.
இதில், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.