ADDED : டிச 22, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், வி.பாளையம் சரஸ்வதி சென்ட்ரல் பள்ளியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் முத்து சரவணன் தலைமை தாங்கினார். எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி., உயர்நிலை பள்ளி தாளாளர் செல்வநாதன், கிறிஸ்துமஸ் விழாவின் உண்மையான அர்த்தம், அன்பு, அமைதி, பகிர்வு ஆகிய மதிப்புகளை வலியுறுத்தி, இயேசுவை பற்றி கூறினார்.
விழாவையொட்டி, பள்ளியில் குடில் அர்ச்சிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. பொருளாளர் சிதம்பரநாதன், அருட்பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து மாணவர்களின் நடனம், பாடல்கள், நாடகம் ஆகியவை நடந்தது. முதல்வர் சுபஸ்ரீ நன்றி கூறினார்.

