/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' படைவீரர்கள் தொழில் முனைவோர் கருத்தரங்கு
/
'மாஜி' படைவீரர்கள் தொழில் முனைவோர் கருத்தரங்கு
ADDED : ஜன 30, 2024 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 1ம் தேதி முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் வரும் 1ம் தேதி மாலை 4.00 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் பழனி தலைமை தாங்குகிறார்.
இதில், துறை அலுவலர்கள் பங்கேற்று தங்களின் துறையில் உள்ள பல திட்டங்கள் குறித்து விரிவாக கூறுகின்றனர்.
சுயதொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.