/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது கார் மோதி விவசாயி பலி
/
பைக் மீது கார் மோதி விவசாயி பலி
ADDED : பிப் 04, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த பெரியாண்டபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 65; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு சித்தணி கிராமத்திற்கு பைக்கில் சென்றார்.
மயிலம் அடுத்த பாலப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற கார், பைக் மீது மோதியது.
இதில் சீனிவாசன் படுகாயம் அடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், இரவு 10:00 மணிக்கு இறந்தார்.
மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.