நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:  வயிற்று வலியால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 52; விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார்.
நேற்று முன்தினம் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், தனது நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

