sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மானியத்தில் தரமான விதைகள் விவசாயிகள் கோரிக்கை

/

மானியத்தில் தரமான விதைகள் விவசாயிகள் கோரிக்கை

மானியத்தில் தரமான விதைகள் விவசாயிகள் கோரிக்கை

மானியத்தில் தரமான விதைகள் விவசாயிகள் கோரிக்கை


ADDED : நவ 01, 2025 02:50 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான, தரமான விதைகளை வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

இதில், பாம்பு கடித்து விவசாயிகள் இறந்தால், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்; நடப்பு பருவத்திற்கு வேளாண் துறை சார்பில் விதை நெல், மானியத்தில் வழங்க வேண்டும்; தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து காய்கறி விதைகளையும் தரமானதாகவும், மானியத்திலும் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதையடுத்து பேசிய கலெக்டர் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us