sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி: ஆன் லைனில் விண்ணப்பித்து பெற ஏற்பாடு

/

ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி: ஆன் லைனில் விண்ணப்பித்து பெற ஏற்பாடு

ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி: ஆன் லைனில் விண்ணப்பித்து பெற ஏற்பாடு

ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி: ஆன் லைனில் விண்ணப்பித்து பெற ஏற்பாடு


ADDED : அக் 09, 2024 11:12 PM

Google News

ADDED : அக் 09, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரி, குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் இணைய வழியில் விண்ணப்பித்து ஏரிகளில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, விழுப்புரம் கலெக்டர் பழனி கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காகவும், தங்களது கிராமம் அமைந்துள்ள தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்களில் வண்டல் மண், களிமண்ணை இலவசமாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்காக, அரசு உத்தரவின்படி ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகரித்துக்கொள்ளவும், வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் இதர பொதுமக்களுக்கு வழங்க தகுதிவாய்ந்த 263 நீர்நிலைகளின் விவரம், புல எண் மற்றும் எடுக்க உள்ள அதிகபட்ச கனிமத்தின் அளவு குறித்து, ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக, விவரங்கள் பெறப்பட்டு, விழுப்புரம் மாவட்ட அரசிதழில், சிறப்பு வெளியீடு மூலம் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விவசாயிகள் வைத்துள்ள நன்செய் நிலம் ஏக்கர் ஒன்றுக்கு 75 கனமீட்டர் அளவும் (25 டிராக்டர் லோடுகள்), புன்செய் நிலம் ஏக்கர் ஒன்றுக்கு 90 கன மீட்டர் அளவும் (30 டிராக்டர் லோடுகள்), வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் (10 டிராக்டர் லோடுகள்), மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர் லோடுகள்) என்ற அளவிற்கும், வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

விவசாய நிலங்களுக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், தங்களின் உபயோகத்திற்கு ஏற்றார்போல் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று, https://www.tnesevai.tn.gov.in இணையவழியில் விண்ணப்பித்து, அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், தங்களுக்கு சொந்தமான நிலத்தின் விபரங்களை தெளிவாக குறிப்பிட்டும் மற்றும் களிமண் தேவைப்படும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது விபரங்களுடனும்... என்ற இணையதளம் மூலம் அந்தந்த தாசில்தாருக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திகொள்ளலாம் என்று, கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us