நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:  திண்டிவனம் அருகே விவசாயி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமால், 60; விவசாயி.
கடந்த 23ம் தேதி, வீட்டிலிருந்து தனது விவசாய நிலத்திற்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர்.
இது குறித்து, ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

