ADDED : நவ 12, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த சித்தணி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகள் தேன்மொழி, 25; பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
இவரை கடந்த 8ம் தேதி மதியம் 1:00 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.