ADDED : செப் 11, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய் நல்லுார்: மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தடுத்தாட்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் நாராயணன், 31; முடி திருத்தும் தொழிலாளி.
இவர் கடந்த 8ம் தேதி மாலை 3:00 மணியளவில் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து இவரது தந்தை அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.