/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது கார் மோதி விபத்து தந்தை பலி; தாய், மகன் காயம்
/
பைக் மீது கார் மோதி விபத்து தந்தை பலி; தாய், மகன் காயம்
பைக் மீது கார் மோதி விபத்து தந்தை பலி; தாய், மகன் காயம்
பைக் மீது கார் மோதி விபத்து தந்தை பலி; தாய், மகன் காயம்
ADDED : ஆக 27, 2025 11:19 AM
ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோட்டில் கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற தந்தை உயிரிழந்தார். தாய், மகன் பலத்த காயமடைந்தனர்.
திருககோவிலுார் அடுத்த மாடாம்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நாராயணன், 22; இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், வரும் செப்., 4ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக, நாராயணன், இவரது தந்தை ஆறுமுகம், 42; தாய் சென்னியம்மாள், 38; ஆகியோர் உறவினர்களுக்கு பத்திரி க்கை வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று பத்திரிக்கை வைத்து முடித்து விட்டு மாலை 5:00 மணியளவில் , மூவரும் பைக்கில் வீடு திரும்பினர்.
பகண்டை கூட்ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த போர்டு கார் (டி.என் 10-ஏக்யூ4305)நாராயணன் குடும்பத்தினர் சென்ற பைக் மீது மோதியது.
இதில், ஆறுமுகம், சென்னியம்மாள், நாராய ணன் மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆறுமுகம் உயிரிழந்தார். சென்னியம்மாள், நாராயணன் சிகிச் சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து பகண்டைகூட்ரோடு போலீசார்வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.