நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே சென்னகுணத்தை சேர்ந்த நாகப்பன் மனைவி ஜெயா, 30; இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜெயா மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவர் போலீசில் புகாரளித்தார். இது குறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.