ADDED : ஆக 17, 2025 03:44 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே பைபர் படகு கவிழ்ந்து மீனவர் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், நடுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமஜெயம், 45; மீனவர். இவர், தனக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார்.
நடுக்குப்பம் பகுதியில் இருந்து ஒரு நாட்டிக்கல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் ராமஜெயம் மீது படகு கவிழ்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நடுக்குப்பம் மீனவர்கள், ராமஜெயத்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராமஜெயம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

