sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் அருகே கோஷ்டி மோதல் நாட்டு வெடி வீசியதில் 5 பேர் படுகாயம் மூன்று பேர் கைது

/

விழுப்புரம் அருகே கோஷ்டி மோதல் நாட்டு வெடி வீசியதில் 5 பேர் படுகாயம் மூன்று பேர் கைது

விழுப்புரம் அருகே கோஷ்டி மோதல் நாட்டு வெடி வீசியதில் 5 பேர் படுகாயம் மூன்று பேர் கைது

விழுப்புரம் அருகே கோஷ்டி மோதல் நாட்டு வெடி வீசியதில் 5 பேர் படுகாயம் மூன்று பேர் கைது


ADDED : நவ 28, 2024 12:54 AM

Google News

ADDED : நவ 28, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மது போதையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், நாட்டு வெடி வீசியதில் 5 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், முத்தோப்பு திடீர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன், 42; இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன், விழுப்புரம் அடுத்த அயனம்பாளையம் கால்நடை பயிற்சி மையம் அருகே உள்ள காலியிடத்தில் மது குடித்துக்கொண்டிருந்தார்.

அங்கு வந்த தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்,34; தரணிதரனுடன் மது குடித்துக்கொண்டிருந்த பாப்பான்குளத்தை சேர்ந்த அஸ்லம்,35; என்பவரிடம், கடனாக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இவர்களுக்குள் ஏற்கனவே பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டுள்ளனர்.

அப்போது, சந்தோஷ்குமார் எடுத்து வந்த நாட்டு வெடிகளை தீ வைத்து, எதிர் தரப்பினர் மீது வீசியுள்ளார். நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில், தரணிதரன், அயனம்பாளையத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் மகேஷ், 27; சுந்தரமூர்த்தி மகன் தாமோதரன், 35; சித்தேரிக்கரையை சேர்ந்த முருகன் மகன் முரளி, 28; ஆகியோருக்கு கை, கால்கள், முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. தரணிதரன் தரப்பினர் தடி, பீர் பாட்டிலால் தாக்கியதில், சந்தோஷ்குமார் காயமடைந்தார்.

இவர்கள் அனைவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

இரு தரப்பினர் அளித்த புகார்களின் பேரில், 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். சந்தோஷ்குமார் மற்றும் சதீஷ்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us