/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவலுார்பேட்டையில் பூ பல்லக்கு விழா
/
அவலுார்பேட்டையில் பூ பல்லக்கு விழா
ADDED : ஏப் 27, 2025 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலில் பூ பல்லக்கு விழா நடந்தது.
மலர் தொடு வியாபாரிகள் சார்பில், நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. மதியம் கோவில் வளாகத்தில் அவலுார்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது.
இரவு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பூ பல்லக்கில் வீதியுலா, கேரளா செண்டைமேளம் மற்றும் வாண வேடிக்கையுடன் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.