sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை விழுப்புரத்தில் உறவினர்கள் மறியல்

/

மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை விழுப்புரத்தில் உறவினர்கள் மறியல்

மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை விழுப்புரத்தில் உறவினர்கள் மறியல்

மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை விழுப்புரத்தில் உறவினர்கள் மறியல்


ADDED : ஆக 11, 2025 06:59 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கந்துவட்டி நெருக்கடியால் முன்னாள் ஊராட்சி தலைவர் தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி, உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே கோனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்தனன் மகன் ஸ்ரீபதி,46; முன்னாள் ஊராட்சி தலைவர். இவர், ஒருகோடி கிராமத்தை சேர்ந்த நண்பர் ஒருவருக்கு, விழுப்புரத்தில் உள்ள ஒரு வீட்டு மனையை அடமானம் வைத்து ரூ.35 லட்சம் வட்டிக்கு வாங்கி, கொடுத்தார்.

அதற்கான வட்டி தொகையை அவரது நண்பர் செலுத்தாததால், கடன் தொகை ரூ.56 லட்சமாக அதிகரித்து, ஸ்ரீபதி நெருக்கடியில் தவித்து வந்தார்.

இதனிடையே அந்த வீட்டு மனையை, அடமானம் வாங்கியவர்கள், வேறு நபருக்கு விற்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீபதி கடந்த ஜூலை 20ம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்தார். சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 6:30 மணிக்கு, ஸ்ரீபதியின் இறுதி சடங்கிற்கு வந்திருந்த அவரது உறவினர்கள் திரண்டு வந்து, விழுப்புரம், மாம்பழப்பட்டு நெடுஞ்சாலை, இந்திராநகர் சாலை சந்திப்பில் 'திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபதி கந்து வட்டி நெருக்கடியால் இறந்துவிட்டதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷமிட்டனர்.

தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், அவர்கள் மறியலை கைவிட்டனர்.

இதனால், விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us