sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வனத்துறை அதிகாரிகளை தாக்கிய 4 பேருக்கு வலை

/

வனத்துறை அதிகாரிகளை தாக்கிய 4 பேருக்கு வலை

வனத்துறை அதிகாரிகளை தாக்கிய 4 பேருக்கு வலை

வனத்துறை அதிகாரிகளை தாக்கிய 4 பேருக்கு வலை


ADDED : நவ 12, 2024 08:21 AM

Google News

ADDED : நவ 12, 2024 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வனத்துறை அதிகாரிகளை தாக்கிய4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை, நத்தாமூர் காப்பு காட்டில் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக கடந்த 8ம் தேதி இரவு 9:30 மணியளவில் உளுந்துார்பேட்டை வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

வனவர்கள் பன்னீர்செல்வம், பிரபாகரன் அங்கு சென்றனர். அவர்களை பார்த்து, மணல் கடத்தியவர்கள் தப்பியோடினர். அவர்களில் தர்மா என்பவரை பிடித்து வேனில் ஏற்றினர்.

தப்பியோடிய நபர்கள் மீண்டும் வந்து வனத்துறையினர் இருவரை தாக்கி, பிடிக்கப்பட்ட தர்மாவுடன் தப்பிச் சென்றனர்.

புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஆனந்த், அஜித்குமார், தர்மா ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us