/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீயணைப்பு வீரர்களுக்கு இலவச கண் பரிசோதனை
/
தீயணைப்பு வீரர்களுக்கு இலவச கண் பரிசோதனை
ADDED : மார் 29, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு வீரர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமை, தீயணைப்பு மாவட்ட அலுவலர் பாஸ்கர் துவக்கி வைத்தார். உதவி மாவட்ட அலுவலர்கள் ஜெயசங்கர், ஜமுனாராணி முன்னிலை வகித்தனர். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுவினர் பரிசோதனை செய்து, ஆலோசனைகள் வழங்கினர். 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.