ADDED : ஜூலை 25, 2025 10:22 PM
திண்டிவனம்; திண்டிவனம் வால்டர் ஸ்கடர் நர்சரி பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம், அரவிந்த் கண் மருத்துவமனை, திண்டிவனம் பால்பாண்டியன் பாத்திரக்கடை சார்பில் நடந்த முகாமிற்கு, நண்பர்கள் லயன்ஸ் சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பால்பாண்டியன் ரமேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் டேவிட் புஷ்பநாதன் முகாமை துவக்கி வைத்தார்.
நண்பர்கள் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், பாலவிக்னேஷ், வீராசாமி, மாவட்ட தலைவர்கள் காமராஜ், ஏகாம்பரம், வெங்கடேசன், சைமன் துரைசிங் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் வெளிப்புற நோயாளிகள் 212 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, 68 பேர் அறுவை சிகிச்சைக்கு புதுச்சேரி தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.