ADDED : ஆக 30, 2025 02:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில், 6 ஜோடிகளுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர் வரிசை பொருட்களுடன் இலவச திருமணம் நடந்தது.
அறநிலைத்துறை உதவி ஆணையர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சங்கீதா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசேகர், முன்னாள் தலைவர் ரங்கநாதன், கோவில் நிர்வாகிகள் மணி, இளங்கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.