ADDED : செப் 01, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் கிராம செயல்வழிக்குழு, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் பெரும்பாக்கம் கிராமத்தில் நடந்தது.
முகாமை ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குநர் ஜெரால்டு மோரீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பெரும்பாக்கம் ஊராட்சி தலைவர் ராஜாங்கம், துணைத் தலைவர் சித்ரா மனோகர், ஊராட்சி செயலாளர் வீரபாண்டி முன்னிலை வகித்தனர்.
முகாமில், பொது நல மருத்துவம், எலும்பு, கண், குழந்தைகள் நல மருத்துவம், அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
முகாமில், டாக்டர்கள் விக்னேஸ்வரன், ஹரிபிரசாத், ஜீவிகா, ஸ்ரீராணி ஆகியோர் பொது மக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்தனர்.