sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பள்ளி மாணவியின் கோரிக்கை ஏற்று இலவச பஸ் இயக்கி வைப்பு

/

அரசு பள்ளி மாணவியின் கோரிக்கை ஏற்று இலவச பஸ் இயக்கி வைப்பு

அரசு பள்ளி மாணவியின் கோரிக்கை ஏற்று இலவச பஸ் இயக்கி வைப்பு

அரசு பள்ளி மாணவியின் கோரிக்கை ஏற்று இலவச பஸ் இயக்கி வைப்பு

1


ADDED : டிச 06, 2024 06:43 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்ஷிணி. இவர் அனந்தமங்கலம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், சமீபத்தில் தனியார் 'டிவி' பாட்டு போட்டியில் பங்கேற்றபோது, பள்ளிக்கு சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என தெரிவித்தார்.

இது முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதன் பேரில், அம்மனம்பாக்கம் - அனந்தமங்கலம் இடையே இலவச அரசு பஸ் இயக்க உத்தரவிட்டார்.

அதையடுத்து நேற்று அம்மனம்பாக்கம் - அனந்தமங்கலம் இடையே பஸ் போக்குவரத்தை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அமைச்சர், மாணவியுடன் அனந்தமங்கலம் அரசு பள்ளி வரை பஸ்சில் பயணித்தார்.

விழுப்புரம் வடக்கு தி.மு.க., செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஓலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us