ADDED : செப் 14, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த வேலியம்பாக்கத்தைச் சேர்ந்த சித்தானந்தன் மகள் பிரியதர்ஷினி,20; பி.ஏ., பட்டதாரி. நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து, சித்தானந்தம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.