ADDED : அக் 19, 2025 03:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: முதியவரை கண்டுபிடித்து தரக்கோரி பேரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த நொளம்பூர், அய்யனாவரம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 85; இவர் கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பேரன் தேவநாதன் நேற்று ஒலக்கூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.