/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்பு கூட்டம்: குவிந்தது 774 மனுக்கள்
/
குறைகேட்பு கூட்டம்: குவிந்தது 774 மனுக்கள்
ADDED : ஏப் 08, 2025 04:30 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 774 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைகூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று, விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தார்.
குறைதீர் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் கடன் உதவி, கலைஞரின் கனவு இல்லம், பிரதமர் வீடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 774 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தொடர்ந்து, முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, சப்கலெக்டர் முகுந்தன், பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

