/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்பு கூட்டம்; 658 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு கூட்டம்; 658 மனுக்கள் குவிந்தன
ADDED : செப் 24, 2024 12:06 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 658 மனுக்கள் பெறப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி மக்களை பெற்றார். கூட்டத்தில் 658 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடி தீர்வு காண துறை அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாற்றத்தினாளிகள் நலத்துறை சார்பில் 10 பேருக்கு 34 ஆயிரத்து ,820 ரூபாய் மதிப்பில் காதொலி கருவிகள் வழங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சப் கலெக்டர் முகுந்தன், சமூக நல அலுவலர் ராஜம்மாள், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், கலால் உதவி ஆணையர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.