/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் வழிப்பறி வாலிபருக்கு 'குண்டாஸ்'
/
பெண்ணிடம் வழிப்பறி வாலிபருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூலை 06, 2025 04:28 AM

விழுப்புரம்: வழிப்பறி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தில்லி, 29; இவர், கடந்த மே 29ம் தேதி, மரக்காணம் அருகே ஆலந்துார் - சூனாம்பேடு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் செயினை வழிப்பறி செய்தார்.
இந்த வழக்கில், மரக்காணம் போலீசார் தில்லியை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் மீது, மரக்காணம் காவல் நிலையத்தில், வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், மரக்காணம் போலீசார் நேற்று தில்லியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை, கடலுார் மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.