ADDED : செப் 23, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் முத்தாம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற தங்கராசு, 59; அவரது மகன் ஆனந்த், 26; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தங்கராசுவை கைது செய்தனர்.