ADDED : செப் 23, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், நேற்று நன்னாடு கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், 42; புதுச்சேரி மாநிலம், மடுகரையைச் சேர்ந்த ஆகாஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, மோகன்ராஜை கைது செய்தனர். இவரிடம் இருந்து 43 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.