ADDED : அக் 14, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : வளவனுார் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் குமளம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கு கடை வீதியில் வாதானுாரைச் சேர்ந்த ராஜவேலு, 39; என்பவரது கடையில் சோதனை நடத்தினர்.
அங்கு, விற்பனைக்காக குட்கா வைத்திருந்தது தெரியவந்தது.
உடன், ராஜவேலு மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.