ADDED : மார் 22, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு போலீசார் நேற்று ராஜகோபால் வீதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.
உடன், கடை உரிமையாளர் விழுப்புரம் ஜனகராஜ் கார்டனைச் சேர்ந்த ராஜாமணி, 42; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, 188 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.