/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா கடத்தியவர் கைது : 20 கிலோ பறிமுதல்
/
குட்கா கடத்தியவர் கைது : 20 கிலோ பறிமுதல்
ADDED : மார் 13, 2026 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் அருகே தனியார் பஸ்சில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மொரட்டாண்டி டோல்கேட்டில், இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் சோதனை செய்ததில், 20 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த புதுச்சேரி, வெங்கட்டா நகரைச் சேர்ந்த கமல் கிேஷார், 51; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பெங்களூருவில் இருந்து புதுச்சேரி பகுதியில் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

