ADDED : நவ 06, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் நடந்த வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி பெருமாள் கோவில் தெருவில், 1999ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன், 49; கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வந்த இவர், இரண்டரை ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
அவருக்கு நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் வெங்கடேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

