/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்கிலிருந்து விழுந்த சுகாதார ஆய்வாளர் பலி
/
பைக்கிலிருந்து விழுந்த சுகாதார ஆய்வாளர் பலி
ADDED : ஏப் 12, 2025 05:17 AM
விழுப்புரம்,: விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த சுகாதார ஆய்வாளர் இறந்தார்.
வளவனுார் அடுத்த கல்லப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானம், 59; முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த 1ம் தேதி, தனது பைக்கில், கோலியனுாரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்றபோது, அனிச்சங்குப்பம் கூட்ரோடு அருகே தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின், மீண்டும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.