sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மத்திய அரசு திட்ட வீடுகள் குறித்த விபரங்கள் பெற உதவி மையம்

/

மத்திய அரசு திட்ட வீடுகள் குறித்த விபரங்கள் பெற உதவி மையம்

மத்திய அரசு திட்ட வீடுகள் குறித்த விபரங்கள் பெற உதவி மையம்

மத்திய அரசு திட்ட வீடுகள் குறித்த விபரங்கள் பெற உதவி மையம்


ADDED : பிப் 15, 2024 05:36 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள், பசுமை வீடுகள் மற்றும் பழங்குடியினர் வீடுகள் ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகம், புகார்கள் மற்றும் திட்டம் சார்ந்த உதவிகளுக்கு உங்கள் உயர்விற்கு உதவி மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில், ஊரக வளர்ச்சி துறை மூலம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டி முடித்த 500 வீடுகளை, அமைச்சர் மஸ்தான் பயனாளிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

தற்போது பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டிய 750 வீடுகளும், துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 500 கழிவறைகளையும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள், பசுமை வீடுகள், பழங்குடியினர் வீடுகுள் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள், புகார்கள், திட்டம் சார்ந்த உதவிகள் குறித்து அனைத்து வட்டாரங்களிலும் 'உங்கள் உயர்விற்கு உதவி மையம்' பெயரில் வீடுகளுக்கான சிறப்பு குறைதீர்வு மற்றும் உதவி மையம் அமைக்கப்படவுள்ளது.

அனைத்து ஊரக குடியிருப்பு திட்ட வீடுகள் தொடர்பாக பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு மாவட்ட அளவில் மொபைல் 9363372753, 9363443274 மூலம் தொடர்பு கொள்ளலாம். நிலுவை தொகை வழங்குதல், தொழில்நுட்ப சிக்கல்கள், நிலம், பட்டா தொடர்பான பிரச்னைகள், வங்கி கடன் தேவைகள், கட்டுமான பொருட்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்த சந்தேங்களை கேட்டு தெளிவு பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us