/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
ADDED : மார் 15, 2024 11:07 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம் நடந்தது.
கவுரவ விரிவுரையாளர் நலச் சங்கம் சார்பில் அரசு கல்லுாரி முன் நடந்த போராட்டத்திற்கு, மண்டல தலைவர் ஆரிமுத்து தலைமை வகித்தார். கிளைத் தலைவர் செல்வகுமார், செயலாளர் முருகேசன், பொருளாளர் பச்சையப்பன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில், அரசு கல்லுாரிகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய கோரிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், வேறு எந்த நியமனமும் செய்யக்கூடாதென இடைக்கால தீர்ப்பும் பெறப்பட்டுள்ள நிலையில், அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது, நீதி மன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
இதனால், கடந்த 20 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள் 4,000 பேர் பணியிழக்கும் நிலை ஏற்படும்.
இதனால், எங்களை பணி நீக்கம் செய்யக்கூடிய வகையில், அரசு அறிவித்துள்ள உதவி பேராசிரியர் நியமன அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

