/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிறந்த நாள் கொண்டாடியவர் தாக்கியதில் ஓட்டல் ஊழியர் பலி
/
பிறந்த நாள் கொண்டாடியவர் தாக்கியதில் ஓட்டல் ஊழியர் பலி
பிறந்த நாள் கொண்டாடியவர் தாக்கியதில் ஓட்டல் ஊழியர் பலி
பிறந்த நாள் கொண்டாடியவர் தாக்கியதில் ஓட்டல் ஊழியர் பலி
ADDED : ஜன 05, 2025 05:37 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர் தாக்கியதில், படுகாயமடைந்த ஓட்டல் ஊழியர் நேற்று இறந்தார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் பிரபாகரன்,50; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்தார்.
கடந்த 30ம் தேதி இரவு வேலை முடிந்ததும், கோவில் எதிரே உள்ள பைக் ஸ்டாண்டில் தனது பைக்கை எடுக்க சென்றார். அப்போது, அங்கு பிறந்தநாள் கொண்டாடிய ராமச்சந்திரன்பேட்டை இளையராஜா, பிரபாகரனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்து, இளையராஜாவை கைது செய்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் நேற்று இறந்தார்.
ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை;
பிரபாகரன் இறந்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் வி.சி., கட்சியினர் நேற்று மாலை 6:00 மணிக்கு, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பிரபாகரன் வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். பிரபாகரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.