/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் 44 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கல்
/
செஞ்சியில் 44 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கல்
செஞ்சியில் 44 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கல்
செஞ்சியில் 44 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கல்
ADDED : ஏப் 28, 2025 04:42 AM

செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு கனவு இல்ல திட்டத்தில், வீடு கட்டுவதற்கான ஆணையை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.
செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கனவு இல்ல திட்ட 2ம் கட்ட பயணாளிகள் 44 பேருக்கு, ரூ. 1.56 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான  ஆணை வழங்கும் நிகழ்ச்சி, ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயக்குமார் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணை வழங்கினார். மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் சத்யா, புவனா, ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி மற்றும் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர். துணை பி.டி.ஓ., பழனி நன்றி கூறினார்.

