/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு கட்டும் திட்டப் பணிகள்: விரைவாக முடிக்க அறிவுரை
/
வீடு கட்டும் திட்டப் பணிகள்: விரைவாக முடிக்க அறிவுரை
வீடு கட்டும் திட்டப் பணிகள்: விரைவாக முடிக்க அறிவுரை
வீடு கட்டும் திட்டப் பணிகள்: விரைவாக முடிக்க அறிவுரை
ADDED : ஏப் 17, 2025 05:11 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வீடு கட்டும் திட்டங்களின் கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும், வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், வீடு கட்டும் திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய கல் வீடுகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்பு திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா மற்றும் பி.எம். ஜன்மன் திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் புதிய வீடு கட்டுமான பணிகளின் நிலை குறித்து ஆலோசனை நடந்தது.
இத்திட்டங்களில் முடிவுற்ற பணிகளின் முன்னேற்ற அறிக்கையை, இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசின், வீடு மறுகட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
குறிப்பட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.