/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : ஜூலை 29, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்; மரக்காணம் அடுத்த நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கன் மனைவி அமுதா, 45; கணவன், மனைவி இருவரும் கூலித் தொழிலாளர்கள். இருவரும் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு வேலைக்குச் சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 9 சவரன் நகைகள் மற்றும் 2.10 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
அமுதா அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம விசாரித்து வருகின்றனர்.