/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்து; கணவன் மனைவி படுகாயம்
/
ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்து; கணவன் மனைவி படுகாயம்
ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்து; கணவன் மனைவி படுகாயம்
ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்து; கணவன் மனைவி படுகாயம்
ADDED : மே 07, 2025 01:47 AM
மயிலம் : மயிலம் அருகே செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி குழந்தை படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி தாலுகா காரை கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் சரவணபவன், 38; மனைவி பாரதி, 34; மகள் கீர்த்தனா 4; மூவரும் ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் மதியம் விக்கிரவாண்டி நோக்கி சென்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் அடுத்த செண்டூர் சந்திப்பு அருகே செல்லும் போது பின்னால் வந்த ஹூண்டாய் கார் ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் சரவணபவன், இவரது மனைவி பாரதி, மகள் கீர்த்தனா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.